sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற இணை பதிவாளர் கைது

/

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற இணை பதிவாளர் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற இணை பதிவாளர் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற இணை பதிவாளர் கைது


UPDATED : மார் 22, 2024 12:19 PM

ADDED : மார் 22, 2024 12:19 AM

Google News

UPDATED : மார் 22, 2024 12:19 PM ADDED : மார் 22, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன், 55. இவர், ஆவடி அடுத்த மோரை பகுதியிலுள்ள 2,400 சதுர அடி நிலத்தை, கடந்த 14ம் தேதி, ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

பத்திரம் பெறுவதற்கு, இணை பதிவாளரான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ், 34, என்பவர், கோடீஸ்வரனிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் தர விரும்பாத கோடீஸ்வரன், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி கோடீஸ்வரன் நேற்று மாலை, ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாய் மதிப்பு நோட்டுகளை, ஆவடி சார்-பதிவாளர் அலுவலகம் அருகே வைத்து, இணை பதிவாளர் கூறியபடி, சைதாப்பேட்டையைச் சேர்ந்த நிலத்தரகர் தென்னரசு, 29, என்பவரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், தென்னரசுவை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், இணை பதிவாளர் அமல்ராஜ் அறிவுறுத்தலின்படி, தென்னரசு லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us