/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்திவாக்கம் குளம்: மீட்டெடுக்க தீர்ப்பாயம் உத்தரவு
/
கத்திவாக்கம் குளம்: மீட்டெடுக்க தீர்ப்பாயம் உத்தரவு
கத்திவாக்கம் குளம்: மீட்டெடுக்க தீர்ப்பாயம் உத்தரவு
கத்திவாக்கம் குளம்: மீட்டெடுக்க தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஆக 03, 2024 12:17 AM
சென்னை, சென்னை, எண்ணுார், கத்திவாக்கத்தில் 5.32 ஏக்கர் பரப்பில் இருந்த தாமரைக்குளம், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், தொழில் நிறுவனங்களால் 2 ஏக்கராக சுருங்கியுள்ளது.
குப்பை கழிவுகள், கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தாமரைக்குளத்தை மீட்டெடுக்க கோரி,தியாகராஜன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த தீர்ப்பாயம், 'தாமரைக்குளத்தை பராமரித்து வரும் சென்னை மாநகராட்சி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'கத்திவாக்கம் தாமரைக்குளத்தில் 52 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதில் 15 ஆக்கிரமிப்புகள் காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள 37 ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்' என, சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாமரைக்குளத்தில் மீதமுள்ள 37 ஆக்கிரமிப்புகளையும் அகற்ற, சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.
வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்., 17ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.