sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குளமான தி.நகர் பஸ் நிலையம்: விழிபிதுங்கி தவித்த பயணியர்

/

குளமான தி.நகர் பஸ் நிலையம்: விழிபிதுங்கி தவித்த பயணியர்

குளமான தி.நகர் பஸ் நிலையம்: விழிபிதுங்கி தவித்த பயணியர்

குளமான தி.நகர் பஸ் நிலையம்: விழிபிதுங்கி தவித்த பயணியர்


ADDED : மே 18, 2024 12:24 AM

Google News

ADDED : மே 18, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.நகர், சென்னையில், நேற்று முன்தினம் பெய்த மழையில் குளம் போல் மாறிய, தி.நகர் பேருந்து நிலையத்தில், பயணியர் அவதிப்பட்டனர்.

சென்னை மாநகரின் வர்த்தக மையமாக, தி.நகர் உள்ளது. இங்கு, ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

இவற்றில், பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், தி.நகரில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னையின் மற்ற பகுதிகளுக்கு, பேருந்து சேவை அதிகம் இருக்கும்.

இந்த பேருந்து நிலையம், சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தில், தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையில், தி.நகர் பேருந்து நிலையம் முழுதும் தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சியளித்தது.

இதனால், பயணியர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல முடியாமல் தவித்தனர். தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 131 கோடி ரூபாய் மதிப்பில், புது மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

தி.நகர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனையை, 67 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வளாகமாக மாற்ற, சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது.

இதில், அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரைதளத்தில் பேருந்து நிலையம், முதல் தளத்தில் பணிமனையும், இரண்டு மற்றும் மூன்று ஆகிய தளங்களில் வணிக நிறுவனங்கள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், ஆண்டுகள் கடந்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட தி.நகரில், பயணியருக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் இல்லை என்பது, பெரிய குறையாகவே உள்ளது.






      Dinamalar
      Follow us