ADDED : மார் 06, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே செறுமன்கோணத்தைச் சேர்ந்த 8, 9ம் வகுப்பு பயிலும் மாணவியர் இருவரும், பிப்., 7ல் பள்ளிக்கு சென்றவர்கள் திரும்பவில்லை.
பெற்றோர், திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
அதில், 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், அவர்கள் சென்னையில் இருப்பது தெரிந்தது. மாணவியர் இருவரையும் போலீசார் மீட்டு அழைத்து சென்றனர். இரண்டு மாணவியரில் ஒருவர், ஏற்கனவே சென்னையில் படித்தவர் என்பதால், அவருடன் சேர்ந்து சென்னையை சுற்றிப் பார்க்க வந்ததாக இருவரும் தெரிவித்தனர்.
இதற்காக, தங்கள் வசம் இருந்த நகையை, கோட்டாரில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.