sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கும்மிடி ரயில்கள் சேவை மூன்று நாட்கள் மாற்றம்

/

கும்மிடி ரயில்கள் சேவை மூன்று நாட்கள் மாற்றம்

கும்மிடி ரயில்கள் சேவை மூன்று நாட்கள் மாற்றம்

கும்மிடி ரயில்கள் சேவை மூன்று நாட்கள் மாற்றம்


ADDED : மார் 24, 2024 01:01 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொன்னேரி - மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே, வரும் 25, 26, 27ம் தேதிகளில் காலை 9:25 மணி முதல் 11:40 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஒரு பகுதி ரத்து:

 சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:30, காலை 10:35 மணி ரயில்கள் வரும் 25, 26ம் தேதிகளில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்

 சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40 மணி ரயில் வரும் 25, 26ம் தேதிகளில் எண்ணுார் வரை மட்டுமே இயக்கப்படும்

 கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி ரயில் வரும் 25, 26, 27ம் தேதிகளில் மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும்

 கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை காலை 10:55 மணி ரயில் வரும் 25, 26ம் தேதிகளில் மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும்

 சூலுார்பேட்டை - சென்னை சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில் வரும் 25, 26ம் தேதிகளில் எண்ணுாரில் இருந்து இயக்கப்படும்

 சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00 மணி ரயில் வரும் 27ம் தேதி மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்பதிவில்லா ரயில்கள்

சென்னை, மார்ச் 24-ஹோலி பண்டிகையொட்டி, கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், 25க்கும் மேற்பட்ட கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூர் - மேற்கு வங்கம் மாநிலம் சந்திரகாச்சி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.  சென்னை எழும்பூரில் இருந்து வரும் 30, ஏப்., 6 மற்றும் இரவு 11:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அடுத்த 3வது நாளில் காலை 7:50 மணிக்கு, சந்திரகாச்சி சென்றடையும். சந்திரகாச்சியில் இருந்து வரும் 25, ஏப்., 1, 8ம் தேதி காலை 10:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3:30 மணிக்கு, சென்னை எழும்பூருக்கு வந்தடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.








      Dinamalar
      Follow us