/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நில மோசடி பா.ம.க., பிரமுகருக்கு சிறை
/
நில மோசடி பா.ம.க., பிரமுகருக்கு சிறை
ADDED : மே 13, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர், பழைய கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 59. இவரது உறவினரின் ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலம் போலியாக, பத்திரப்பதிவு செய்தது தெரிந்தது. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்.
இதுகுறித்து ஏழுமலை, 2023 மார்ச் 27 ல் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. யிடம் புகார் அளித்தார். விசாரணையில் கும்மிடிப்பூண்டி பா.ம.க., நகர செயலர் இளஞ்செல்வம் என்பவர், உறவினர்கள் துணையோடு, நிலத்தில் மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து நில அபகரிப்பு தடுப்பு போலீசார், இரு தினங்களுக்கு முன் இளஞ்செல்வத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இளஞ்செல்வம் மனைவி ஜோதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலராக உள்ளார்.