sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மடிப்பாக்கம் சாலைகளுக்கு விமோசனம்

/

மடிப்பாக்கம் சாலைகளுக்கு விமோசனம்

மடிப்பாக்கம் சாலைகளுக்கு விமோசனம்

மடிப்பாக்கம் சாலைகளுக்கு விமோசனம்


ADDED : ஜூன் 28, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம்,

பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில் 187, 188 என, இரு வார்டுகள் உள்ளன. இங்கு, 2022ல் பாதாள சாக்கடை அமைக்கும் பணி, 256.90 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டது.

மழை காரணமாக, மொத்த பணி காலத்தில் 11 மாதங்கள் வேலை நடக்கவில்லை.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் பணிகள் தீவிரமடைந்ததால், வார்டு 188க்கு உட்பட்ட பகுதியில், 298 தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் பொருத்தப்பட்டன.

பின், இந்த பள்ளங்கள் சரியாக மூடப்படாததால், சாலையில் ஏற்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி, மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறின.

பல தெருக்களில், வீடுகளில் உள்ள வாகனங்களைக்கூட வெளியே எடுக்க முடியவில்லை. இது குறித்து நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, மாநகராட்சி அதிகாரிகள் சிறப்புக் கவனம் எடுத்து, தற்போது சாலைகளை சீரமைக்கும் பணிகளை துவக்கி உள்ளனர்.

முதற்கட்டமாக, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை, சிமென்ட் கலவையால் மூடும் பணிகள் நடக்கின்றன.

பெருங்குடி மண்டல செயற்பொறியாளர் முரளி கூறியதாவது:

வார்டு 188க்கு உட்பட்ட பகுதிகளில், முன் விவசாயம் நடந்ததால், மண்ணில் நெகிழ்வு தன்மை அதிகம். அதனால், பள்ளங்களை சீரமைக்க மண் கலவை கொட்டி சரிசெய்தாலும், மழைநீர் தேங்கும் போது, மீண்டும் சகதியாகி விடுகிறது.

பள்ளங்களில் சிமென்ட் கலவை நிரப்பி, சாலை அமைத்தால் மட்டுமே தாங்கும். அதனால், குபேரன் நகர், ராம் நகர், எல்.ஐ.சி., நகர் உள்ளிட்ட தெருக்களில், பாதாள சாக்கடை பணியால் ஏற்பட்ட பள்ளங்களில் சிமென்ட் கலவை கொட்டி சரிசெய்யப்படுகிறது.

இதையடுத்து, புதிய சாலை அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us