/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நட்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூட உரிமம் ரத்து
/
நட்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூட உரிமம் ரத்து
ADDED : ஆக 04, 2024 12:25 AM
சென்னை, சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த, ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களில், மதுக்கூட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், ரேடிசன் ப்ளூ எனப்படும் வி.வி.ஏ., ஹோட்டல்ஸ், ஹயாத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களில், எப்.எல்., 3 மதுக்கூடங்கள், அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன.
அவற்றில் சட்ட விதிகளுக்கு மாறாக, வெளி நபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்கள் வினியோகம் செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட விபரங்கள், அரசுக்கு தெரிய வந்தன.
தொடர்ந்து, மேற்கண்ட ஹோட்டல்களில் மதுக்கூடம் நடத்த வழங்கப்பட்டிருந்த உரிமங்களை, தற்காலிகமாக ரத்து செய்தும், அவற்றை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.