ADDED : ஜூலை 11, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு தனிநபர், சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது.
அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வட்டி விகிதம் 1.25 லட்சம் ரூபாய்க்கு, 7 முதல் 8 சதவீதம் வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். கழகத்தின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.