நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டினம்பாக்கம், பட்டினம்பாக்கம் கடற்கரை முகத்துவாரத்தில், நேற்று மாலை, அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தோர், பட்டினம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த பட்டினம்பாக்கம் போலீசார் ஆண் சடலத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.