sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டட விதிமீறல் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

/

கட்டட விதிமீறல் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

கட்டட விதிமீறல் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

கட்டட விதிமீறல் பணம் கேட்டு மிரட்டியவர் கைது


ADDED : மே 07, 2024 12:07 AM

Google News

ADDED : மே 07, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர் 3வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மூர்த்தி, 67; அ.தி.மு.க.,வில் ஆலந்துார் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர்., மன்ற செயலர்.

இவர், தன் பழைய வீட்டை இடித்து, புதிய வீடு கட்டினார். இரண்டு மாதங்களுக்கு முன் குடியேறினார். கட்டட அனுமதியை மீறி கட்டியதாக, வடபழனியைச் சேர்ந்த தேவராஜ், மாநகராட்சிக்கு புகார் அளித்துள்ளார்.

அதோடு, கடந்த 2ம் தேதி, மூர்த்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மூன்று நாட்களுக்குள், 3.50 லட்சம் ரூபாய் தந்தால் தான், புகாரை வாபஸ் வாங்குவேன் என, மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து மூர்த்தி, ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், தேவராஜை அழைத்து விசாரித்தனர். பணம் கேட்டு மிரட்டியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, போலீசார் தேவராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us