sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதுவண்ணை கொலை வழக்கு தப்பிய ரவுடிக்கு 'மாவுக்கட்டு'

/

புதுவண்ணை கொலை வழக்கு தப்பிய ரவுடிக்கு 'மாவுக்கட்டு'

புதுவண்ணை கொலை வழக்கு தப்பிய ரவுடிக்கு 'மாவுக்கட்டு'

புதுவண்ணை கொலை வழக்கு தப்பிய ரவுடிக்கு 'மாவுக்கட்டு'


ADDED : ஆக 15, 2024 12:25 AM

Google News

ADDED : ஆக 15, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ், 32. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவர், கடந்த 11ம் தேதி, தண்டையார்பேட்டை, பாலகிருஷ்ணா தெருவில் நண்பர்களுடன்சேர்ந்து மது அருந்தினார்.

போதை தகராறு


அப்போது, போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போலீசார் ஆறு பேரை கைது செய்தனர்.

விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 'மண்டை' பிரகாஷ், 38, பிரகாஷ்ராஜ், 25, தண்டபாணி, 30, மதன், 42, சுரேந்தர், 32, மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக், 34, என்பது தெரிந்தது.

விசாரணையின்போது 'மண்டை' பிரகாஷ் போலீசாரிடம் இருந்து தப்ப, வைத்தியநாதன் மேம்பாலத்தில் ஏற முயன்றார். அப்போது, கால் இடறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்து, கையில் 'மாவுக்கட்டு' போட்டனர்.

போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:

கொல்லப்பட்ட லோகேஷ், 'கானாங்கத்த' ராஜ், 'மண்டை' பிரகாஷ் ஆகியோர் நண்பர்கள். மூவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த 11ம் தேதி மதியம் மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில், கானாங்கத்த ராஜை, மண்டை பிரகாஷ் அடித்துள்ளார்.

அப்போது, லோகேஷ், மண்டை பிரகாஷை தாக்கி அவரை அசிங்கமாக கிண்டல் செய்து உள்ளார்.

ஆத்திரம்


தன்னை விட வயது குறைவாக உள்ள லோகேஷ், தன்னை அடித்தது பிரகாஷுக்கு அசிங்கமானது. இதனால், ஆத்திரமடைந்தவர், கூட்டாளிகளை வைத்து, அன்று மாலையே அவரை தீர்த்துக்கட்டியுள்ளார்.

கொல்லப்பட்ட லோகேஷ், சிறையில் உள்ள பிரபல ரவுடிகளான ஈசா என்கிற ஈஸ்வரன், எலி யுவராஜின் கூட்டாளி.

இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us