sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சோழிங்கநல்லுாரில் சிலாப்பை அகற்றி தார் சாலையாக மாற்றும் 'மெட்ரோ' நிர்வாகம்

/

சோழிங்கநல்லுாரில் சிலாப்பை அகற்றி தார் சாலையாக மாற்றும் 'மெட்ரோ' நிர்வாகம்

சோழிங்கநல்லுாரில் சிலாப்பை அகற்றி தார் சாலையாக மாற்றும் 'மெட்ரோ' நிர்வாகம்

சோழிங்கநல்லுாரில் சிலாப்பை அகற்றி தார் சாலையாக மாற்றும் 'மெட்ரோ' நிர்வாகம்


ADDED : ஆக 05, 2024 01:04 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில், 20 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் சந்திப்பில் ரவுண்டானா மேம்பாலத்துடன், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

இதனால், அங்கு நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும், இரண்டு நிலையங்களில் இருந்து பதித்த தனித்தனி குழாய்கள், சோழிங்கநல்லுார் வழியாக மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம் வரை செல்கின்றன.

இதில், சோழிங்கநல்லுார் சந்திப்பில், குடிநீரை பிரித்து அனுப்பும் வகையில், குழாயை திறந்து மூட வசதியாக வால்வு அமைத்து, 15 அடி நீளம், 15 அடி ஆழம், 10 அடி அகலத்தில் தொட்டி கட்டப்பட்டது.

இந்த தொட்டியின் மேல் பகுதி சிமென்ட் கலவை சிலாப் போட்டு மூடப்பட்டு உள்ளது. இதில் வாகனங்கள் செல்வதற்கான தேவை இல்லாததாக கருதப்பட்டதால், சிலாப்பின் தடிமன் குறைவாக போடப்பட்டது.

இந்நிலையில், ரவுண்டான மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வாகன நெரிசல் ஏற்படலாம். அதனால், தடிமன் குறைவாக போடப்பட்ட சிலாப்பை அகற்றி, அதிக பாரம் தாங்கும் வகையில் சிலாப் அமைக்கப்பட்டு, அதன் மீது தார் சாலை போடப்படுகிறது.

இப்பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், தொட்டி இருந்த பகுதி சாலையாக மாற்றி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us