sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சினிமா பாடகர் தாக்கியதாக மெட்ரோ ரயில் அதிகாரி புகார்

/

சினிமா பாடகர் தாக்கியதாக மெட்ரோ ரயில் அதிகாரி புகார்

சினிமா பாடகர் தாக்கியதாக மெட்ரோ ரயில் அதிகாரி புகார்

சினிமா பாடகர் தாக்கியதாக மெட்ரோ ரயில் அதிகாரி புகார்


ADDED : மே 13, 2024 01:35 AM

Google News

ADDED : மே 13, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருகம்பாக்கம்:மதுரவாயல், கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் வேல்முருகன், 45. இவர், கிராமிய பாடல்களில் பிரபலம். ஆடுகளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, ஆற்காடு சாலை வழியாக காரில் வேல்முருகன் சென்றார்.

விருகம்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் அருகில் மெட்ரோ ரயில் பணிக்காக, இரவு நேரத்தில் ஒரு வழிப்பாதையாக மாற்றி இருந்தனர்.

இதனால் வேல்முருகன், வீட்டிற்கு சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமான உதவி மேலாளர் வடிவேலு, 35, என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாக தெரிகிறது.

இது தொடர்பாக வடிவேலு, விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில் வேல்முருகன் மதுபோதையில் தன்னை தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன், சென்னை விமான நிலையத்தில் மதுபோதையில் அதிகாரிகளுடன் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ, தற்போது பகிரப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us