/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல டென்னிஸ் போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணவ் வெற்றி
/
மண்டல டென்னிஸ் போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணவ் வெற்றி
ADDED : ஆக 31, 2024 12:10 AM
சென்னை, சென்னைப் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், பெண்களுக்கான 'ஏ' மண்டலடென்னிஸ் போட்டி, துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், எம்.ஓ.பி., வைஷ்ணவ், ஜெபாஸ், அன்னை வேளாங்கண்ணி, ராணி மேரி, எம்.ஜி.ஆர்., ஜானகி உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.
அரையிறுதிப் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் மற்றும் டபள்யூ.சி.சி, அணிகள் மோதின. இதில், 2 - 0 என்ற செட் கணக்கில் எம்.ஓ.பி., வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் ராணி மேரி கல்லுாரி அணியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தது. ஜெபாஸ் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் கல்லுாரி அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன.