/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேபிள் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்
/
கேபிள் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்
ADDED : மே 15, 2024 12:37 AM
திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கம், சாஸ்திரி தெருவில், கடந்த 10ம் தேதி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள் நான்கு பேர், சாலையோரத்தில் 'இன்டர்நெட் கேபிள்' பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவர், அவரது நண்பர்களுடன் வந்து, 'எங்கள் அனுமதி இல்லாமல், எங்கள் வீட்டு அருகில் ஏன் வேலை செய்கிறீர்கள்' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இருதரப்பு வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, தனியார் நிறுவன ஊழியர்களை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த பாடிக்குப்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 27, ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் தொடர்பாக, திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வன்முறையில் ஈடுபட்ட சந்துரு, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் பெஞ்சமினின் சகோதரி மகன் ஆவார்.

