/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம்
/
பார்த்தசாரதி கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம்
ADDED : ஜூன் 17, 2024 01:37 AM
சென்னை:திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்தாண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இன்று காலை 10:07 மணி - 10:25 மணிக்குள் கொடியேற்ற விழா நடக்கிறது.
விழாவின் இரண்டாம் நாளான, நாளை காலை 6:15 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும், இரவு 7:45 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். 19ம் தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது.
நான்காம் நாள் சூரிய சந்திர பிரபை புறப்பாடும், 5ம் நாள் பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது.
விழாவின் பிரதான நாளான, 23ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 4:30 மணி முதல் 5:15 மணிக்குள் உற்சவர் தேரில் எழுந்தருள்கிறார்.
காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.