/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை குழாயை சரிசெய்வதில் அலட்சியம்
/
பாதாள சாக்கடை குழாயை சரிசெய்வதில் அலட்சியம்
ADDED : ஆக 22, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, மேட்டு தெரு வழியாக பாதாள சாக்கடை பிரதான குழாய் செல்கிறது.
அதிக போக்குவரத்து உடைய இச்சாலையில், திடீரென இக்குழாய் சேதமடைந்து, சாலை உள்வாங்கி பள்ளமாக மாறிவிட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, தினமும் சிரமம் ஏற்படுகிறது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், இதை சரிசெய்வதில், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
- சி.முருகையன், செயலர், குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம்.