sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பள்ளிக்கு புதிய கட்டட பணி மாணவர்கள் இடமாற்றம்

/

பள்ளிக்கு புதிய கட்டட பணி மாணவர்கள் இடமாற்றம்

பள்ளிக்கு புதிய கட்டட பணி மாணவர்கள் இடமாற்றம்

பள்ளிக்கு புதிய கட்டட பணி மாணவர்கள் இடமாற்றம்


ADDED : ஜூலை 10, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,சென்னை மாநகராட்சி ராமநாதபுரம் நடுநிலைப்பள்ளிக்கு, 1.73 கோடி ரூபாய் செலவில் எட்டு வகுப்பறைகள் கட்டும் பணி துவங்கியுள்ளது. மாணவர்கள் தற்காலிக வகுப்பறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சி, ராமநாதபுரம் நடுநிலைப்பள்ளியில், 500 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி, 1981 ம் ஆண்டில் கட்டப்பட்ட, பழமையான பலவீனமான கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இது குறித்து, நான்காவது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் எழுப்பிய தொடர் கேள்விகளால், மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின், 1.73 கோடி ரூபாய் செலவில், எட்டு வகுப்பறைகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கட்டடப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, பள்ளியின் நகர்புற நலவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வகுப்பறைகளுக்கு, நேற்று மாணவர்கள் மாற்றப்பட்டனர்.

ஓரிரு வாரங்களில், பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும் என, பள்ளி தலைமை ஆசிரியை முத்துசெல்வி, மாநகராட்சி உதவி பொறியாளர் சஞ்சீவிராவ் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us