sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெட்ரோ ரயில் கதவுகளில் துணி, பைகள் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

/

மெட்ரோ ரயில் கதவுகளில் துணி, பைகள் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

மெட்ரோ ரயில் கதவுகளில் துணி, பைகள் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

மெட்ரோ ரயில் கதவுகளில் துணி, பைகள் சிக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்


ADDED : மார் 08, 2025 12:00 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :'மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள், பைகள் சிக்கிக் கொள்வதை தடுக்கும் வகையில், புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் கதவு சென்சார்கள் குறைந்தபட்சம், 10 மி.மீ., தடிமனாக இருந்தால் மட்டுமே தடைகளைக் கண்டறியும்.

இருப்பினும், பெரும்பாலான ஆடைகள் மற்றும் பை பட்டைகள், 0.3 மி.மீ., தடிமனுக்கும் குறைவாக இருப்பதால், அவற்றைக் கண்டறிய முடியாது.

குறிப்பாக, பயணியரின் ஆடைகள், பொருட்கள் சிக்கிக் கொண்டால், பாதுகாப்பு பணியாளர்கள், பயணியர் அவசர பொத்தானை அழுத்த வேண்டும்.

எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில், அனைத்து மெட்ரோ ரயில்களிலும், 'ஆன்ட்டி டிராக் சிஸ்டம்' எனும் புதிய தொழில்நுட்பம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, 40 கோடி ரூபாய் வரை செலவாகும்.

மெட்ரோ ரயில் கதவுகளுக்கு இடையே உள்ள ரப்பர் மணிகள் மாற்றப்பட்டு, இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட சென்சார் அமைப்பு நிறுவப்படும்.

இது, மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கிய பொருளில் இருந்து, குறைந்தபட்ச சக்தியைக்கூட கண்டறியும். மேலும், இது ஒரு பயணி இழுக்கும்முன் அவசரகால பிரேக்குகள் செயல்படுவதை உறுதி செய்யும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us