/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை மின்நிலைய உற்பத்தி பாதிப்பு
/
வடசென்னை மின்நிலைய உற்பத்தி பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின்வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல்மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகாவாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சென்னை மற்றும் அதைச் சுற்றிய மாவட்டங்களின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், வடசென்னை விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு, 8:58 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.