/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு கடைகள் அட்டூழியம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
/
ஆக்கிரமிப்பு கடைகள் அட்டூழியம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
ஆக்கிரமிப்பு கடைகள் அட்டூழியம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
ஆக்கிரமிப்பு கடைகள் அட்டூழியம் குடியிருப்புவாசிகள் கடும் அவதி
ADDED : மே 16, 2024 12:25 AM

திருமங்கலம்,
அண்ணா நகரை அடுத்த, திருமங்கலத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பராமரிப்பில், அரசு அலுவலர்களின் வாடகை குடியிருப்புகள் உள்ளன.
இக்குடியிருப்பில் அரசு உயர் அலுவலர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், உயர் நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் என, 606 குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இக்குடியிருப்பின் முன்பகுதியில் உள்ள நடைபாதைகளில், 20-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மாலை மற்றும் இரவு வேளைகளில், கடைகளில் உணவு அருந்துவோர், குடியிருப்புக்கு செல்லும் நுழைவாயிலில் வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர்.
இதுகுறித்து தட்டிக் கேட்போரிடம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சமீபத்தில், ஆக்கிரமிப்பாளர்களை தட்டிக்கேட்ட அரசு ஊழியர் ஒருவரின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து, திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.