sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆக்கிரமிப்பு கடைகள் அண்ணாநகரில் அகற்றம்

/

ஆக்கிரமிப்பு கடைகள் அண்ணாநகரில் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அண்ணாநகரில் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் அண்ணாநகரில் அகற்றம்


ADDED : ஆக 19, 2024 02:07 AM

Google News

ADDED : ஆக 19, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:அண்ணாநகர் ரவுண்டானா முதல் திருமங்கலம் வரை உள்ள பிரதான சாலையில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

சென்னை மாநகர சாலைகளில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, அண்ணா நகர் ரவுண்டானா முதல், திருமங்கலம் வரை உள்ள பிரதான சாலை மற்றும் நடைபாதைகளில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன.

இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த தொடர் புகார்களையடுத்து, நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி அதிகாரிகள்,'பொக்லைன்' வாயிலாக, சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

இதில் தள்ளுவண்டி கடைகள், 'டீ' கடைகள், பிரியாணி கடைகள் என, 30க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

இதனால் சாலையோர வியாபாரிகள் ஆத்திரமடைந்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us