/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு ரூ.10 கோடியில் அலுவலகம்
/
சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு ரூ.10 கோடியில் அலுவலகம்
சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு ரூ.10 கோடியில் அலுவலகம்
சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு ரூ.10 கோடியில் அலுவலகம்
ADDED : மார் 04, 2025 12:10 AM

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகம், ஓ.எம்.ஆரில் உள்ளது. இந்த வளாகம், 50 சென்ட் பரப்பு கொண்டது.
சோழிங்கநல்லுார் பேரூராட்சியாக இருந்தபோது, கட்டடம் கட்டப்பட்டது. மாநகராட்சி ஆனபின், இடப்பற்றாக்குறையால் வருவாய், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகள், அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில், 15 ஆண்டுகளாக செயல்படுகின்றன.
இதனால், மக்கள் கோரிக்கை வைத்தும், சமூக நலக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை.
அதேபோல், துப்புரவு பணி அலுவலகமும், தனியாக செயல்படுகிறது. மண்டல அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
நெருக்கமாக மேஜைகள் போட்டு பணி செய்வதால், மக்கள் அதிகாரிகளை நேரடியாக சந்திப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இதனால், புதிதாக மண்டல அலுவலகம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, 10 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதில், 10,000 சதுர அடி பரப்பில், தரைத்தளத்தில் வாகன நிறுத்தம், முதல் மற்றும் இரண்டாம் தளம், தலா, 9,900 சதுர அடி பரப்பு மற்றும் 3ம் தளம், 1,200 சதுர அடி பரப்பில் அமைய உள்ளது.
விரைவில், புதிய மண்டல அலுவலகம் கட்டும் பணி துவங்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.