/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியிடம் 'டபுள் மீனிங்' முதியவர் கைது
/
மாணவியிடம் 'டபுள் மீனிங்' முதியவர் கைது
ADDED : ஜூன் 27, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, வேளச்சேரி, உஷா தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜெயக்குமார், 58. இவர், தினமும் நடைபயிற்சி செல்வார்.
ஒரு வாரமாக, வேளச்சேரியைச் சேர்ந்த 20 வயதுள்ள, சட்டக்கல்லுாரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியும் இவரை, தந்தை போல நினைத்து பேசியுள்ளார்.
நேற்று முன்தினம், மாணவியிடம் தவறான கண்ணோட்டத்தில் அணுகி, ஒரு கட்டத்தில், 'இரட்டை அர்த்த' வார்த்தைகளில் பேசி உள்ளார். கோபமடைந்த மாணவி, வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி, சார்லஸ்ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.