sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

/

கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த பைக் ஒருவர் பலி; இருவர் படுகாயம்


ADDED : மார் 02, 2025 12:39 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, பழவேற்காடு, ஜமீலாபாத் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் காசிம், 33, நிஜாமுதின், 32, அரோன், 32. மூவரும், சமையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று, பொன்னேரி அடுத்த தேவம்பட்டு பகுதியில், சமையல் பணிக்காக சென்றனர். பணி முடிந்து, மாலை 5:00 மணிக்கு, மூவரும் 'ராயல் என்பீல்டு' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தேவம்பட்டு - மெதுார் சாலை வழியாக, கோளூர் அருகே வந்த போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.

தலைக்கவசம் அணியாத நிலையில், மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில், பைக் ஓட்டி வந்த அப்துல் காசிம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த நிஜாமுதின், அரோன் ஆகியோரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us