/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு கட்டும் பணி தாமதம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
/
வீடு கட்டும் பணி தாமதம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 01, 2024 01:07 AM
சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் தையூரில், 'அக் ஷயா' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் வீடு வாங்க, பிரியா ஸ்ரீநிவாசன் என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்து, 33.91 லட்சம் ரூபாய் செலுத்தினார். ஒப்பந்தப்படி 42 மாதங்களில், கட்டுமான நிறுவனம் பணியை முடிக்காததால், திட்டத்தில் இருந்து விலகுவதாக ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
இதற்கு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொள்ளாததால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட திட்டத்தில் வீடு வாங்குவதில் இருந்து விலகுவதற்கான உரிமை, மனுதாரருக்குஉள்ளது. உரிய காரணத்தால் விலகியதால், மனுதாரரிடம் இருந்து வசூலித்த 33.91 லட்சம் ரூபாயை, வட்டியுடன் நிறுவனம் திருப்பித்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.