/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடும்பத்தை அலறவிட்ட ஓட்டேரி 'தனி ஒருவன்'
/
குடும்பத்தை அலறவிட்ட ஓட்டேரி 'தனி ஒருவன்'
ADDED : செப் 05, 2024 01:30 AM
ஓட்டேரி, ஓட்டேரி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்தானம், 50; தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனை செய்யும் இவர், மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவரது மூத்த மகளுக்கு குழந்தை பிறந்த நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி குழந்தையை பார்க்க, மருத்துவமனைக்கு சென்றார். அதன் பின் காணவில்லை. அவரது மொபைல்போன் எண்ணும் தொடர்பில் இல்லை.
இதனால் நேற்று முன்தினம் இரவு, சந்தானத்தின் மருமகன் சுபாஷ் என்பவர் சென்று பார்த்த போது, சந்தானம் வீடு திறந்திருந்த நிலையில், ரத்தக்கறையும், ரத்தம் படிந்த இரண்டு கத்திகளும் கிடந்துள்ளன.
அதிர்ச்சியடைந்த சுபாஷ், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், தனிமையில் இருந்த சந்தானம், மன அழுத்த நோயால் பாதித்து, கையை கத்தியால் கீறி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின் மனம் மாறி, வில்லிவாக்கத்தில் உள்ள இரண்டாவது மகள் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
இதையடுத்து, சந்தானம் மற்றும் அவரது இரண்டாவது மகளை அழைத்து பேசிய போலீசார், அவருக்கு 'கவுன்சிலிங்' தர வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.