sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓவியங்களால் மிளிரும் மேம்பால ரயில் துாண்கள்

/

ஓவியங்களால் மிளிரும் மேம்பால ரயில் துாண்கள்

ஓவியங்களால் மிளிரும் மேம்பால ரயில் துாண்கள்

ஓவியங்களால் மிளிரும் மேம்பால ரயில் துாண்கள்


ADDED : மே 31, 2024 12:55 AM

Google News

ADDED : மே 31, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார் - பெருங்குடி மண்டலத்திற்கு இடைப்பட்ட பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்டச்சாலையில், மேம்பால ரயில்வே திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக மொத்தம், 156 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த துாண்களில், போஸ்டர்கள் மற்றும் விளம்பரம் வரைவதை தடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 'ஜியோ இந்தியா பவுன்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், முதற்கட்டமாக, 86 துாண்களில் ஓவியங்கள் வரையும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

அந்த அமைப்பைச் சேர்ந்த பிரியா கூறியதாவது:

பரங்கிமலை - வேளச்சேரி மேம்பால ரயில் திட்ட துாண்களை அழகுபடுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மொத்தம் உள்ள, 156 துாண்களில், 86 துாண்களில் ஓவியம் வரைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த துாண்களில் பண்டைய தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையிலும், பழங்கால விளையாட்டுகளை கண்முன் கொண்டு வரும் வகையிலும், ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

முழுக்க முழுக்க, 'எனாமல் பெயின்ட்' வாயிலாக வரையப்படுவதால், பல ஆண்டு காலம் நிலைத்து நிற்கும். ஒரு துாணிற்கு ஓவியம் வரைய, 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் மீது அரசியல் கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டாமல் பாதுகாக்க வேண்டும். மீறுவோர் மீது ஓவியம் வரைவதற்கு ஆகும் செலவுகளை, அபராதமாக வசூலிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

-- நமது நிருபர் --






      Dinamalar
      Follow us