sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு

/

ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு

ஆவடி மாநகராட்சியில் ஊராட்சிகள் தி.மு.க., - எம்.எல்.ஏ., எதிர்ப்பு


ADDED : ஜூன் 22, 2024 12:30 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,“ஊராட்சிகளை ஆவடி மாநகராட்சியில் இணைப்பதால், 18,000 குடும்பங்களின் 100 நாள் வேலை திட்ட வாய்ப்பு பறிபோகும்,” என, மாதவரம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுதர்சனம், சட்டசபையில் நேற்று எதிர்ப்பு தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:

மாதவரம் ரவுண்டானா - சோழவரம் சுங்கச்சாவடி வரை 1,900 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் ஜி.எஸ்.டி., கட்டணத்தை விலக்கி கொண்டால், மத்திய அரசு அதற்கான பணத்தை கொடுத்து திட்டம் நிறைவேற்றப்படும் என, தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தமிழக அரசு ஜி.எஸ்.டி., கட்டணத்தை விலக்கிக் கொண்டு பணிகளை துவக்க அனுமதிக்க வேண்டும்.

சென்னை மாவட்டத்தை விட ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு கொண்டதாக, திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி தாலுகா உள்ளது. இதனை இரண்டாக பிரிக்க வேண்டும். வில்லிவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட மோரை, பாலவேடு, பொத்துார் ஊராட்சிகளை ஆவடி மாநகராட்சியில் சேர்க்கப்போவதாக செய்தி வந்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் கோபத்துடன் போராட்டத்தில் ஈடுபட முயற்சிக்கின்றனர்.

அவ்வாறு இணைக்கப்பட்டால், 18,000 குடும்பங்கள், 100 நாள் வேலை திட்டத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, இணைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு சுதர்சனம் பேசினார்.






      Dinamalar
      Follow us