sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாதசாரிகள் கடக்க நேரம் அதிகரிப்பு 10லிருந்து 21 வினாடிகளாக மாற்றம்

/

பாதசாரிகள் கடக்க நேரம் அதிகரிப்பு 10லிருந்து 21 வினாடிகளாக மாற்றம்

பாதசாரிகள் கடக்க நேரம் அதிகரிப்பு 10லிருந்து 21 வினாடிகளாக மாற்றம்

பாதசாரிகள் கடக்க நேரம் அதிகரிப்பு 10லிருந்து 21 வினாடிகளாக மாற்றம்


ADDED : மே 22, 2024 12:41 AM

Google News

ADDED : மே 22, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமலர்' சுட்டிக்காட்டியதால் போலீசார் நடவடிக்கை

சென்னை, நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, போக்குவரத்து சிக்னல்களில் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான நேரத்தை, போக்குவரத்து போலீசார் அதிகரித்து உள்ளனர்.

சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப, சாலை விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. மாறாக, நெரிசலை குறைக்க ஆங்காங்கே மேம்பாலங்களும், சுரங்கப்பாலங்களும் அமைத்து வருகின்றனர்.

இருப்பினும், 'பீக் ஹவர்'களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

இதற்கு தீர்வு காணும் விதமாக, போக்குவரத்து மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், 'யு-டர்ன்' முறையில் பிரதான சாலையில் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர்.

முழுக்க முழுக்க போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு, மாற்றங்களை செய்த போக்குவரத்து போலீசார், பாதசாரிகள் எப்படி ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறம் செல்வர் என்பதை மறந்துவிட்டனர்.

குறிப்பாக சில இடங்களில், பாதசாரிகள் சாலையைக் கடக்க, 10 வினாடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

இதனால், சாலையை கடப்போர் ஒரு முறை அனுமதிக்கப்படும் நேரத்தில், சாலையின் மீடியன் வரை சென்று, நெடுநேரம் காத்திருக்கின்றனர்.

அடுத்த முறை சிக்னல் திறக்கும் போது தான், சாலையை முழுமையாக கடக்க முடிகிறது.

இதுகுறித்து நம் நாளிதழில், புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து நேற்று, பாதசாரிகள் எந்தவித அச்சமும் இல்லாமல் சாலையை முழுமையாக கடப்பதற்கு ஏதுவாக, சிக்னல்களில் 10 வினாடியாக இருந்ததை, 22 வினாடிகளாக போலீசார் மாற்றி அமைத்து உள்ளனர்.

இதேபோல், சென்னை முழுதும் உள்ள சிக்னல்களில், பாதசாரிகள் எந்தவித அச்சமும் இல்லாமல் சாலையை கடக்கும் அளவிற்கு, வினாடிகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us