/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்
/
சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்
சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்
சாலை பள்ளத்தில் தேங்கிய மழைநீர் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஜூலை 07, 2024 12:32 AM

வில்லிவாக்கம், சென்னை, புறநகரில், நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இதில், போரூர், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையான ஆற்காடு சாலையில் தண்ணீர் தேங்கியது.
நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் இந்த சாலையில், போதிய மழைநீர் வடிகால் வசதியில்லை. தவிர, மெட்ரோ பணி நடப்பதால் சாலை மோசமாகி தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது.
பிரதான சாலை இங்கு தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து, மின் மோட்டார் வாயிலாக, சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே சர்வீஸ் சாலையிலும், மழைநீர் தேங்கியது. இந்த சாலையின் ஒரு பகுதியில் வில்லிவாக்கம் சந்தை உள்ளது.
கடந்த வாரம் பெய்த மழைக்கு நாசமான இந்த சாலையின் பள்ளத்தில், இரு நாட்களுக்கு முன் 95வது வார்டு கவுன்சிலர் மற்றும் வில்லிவாக்கம் சந்தை வியாபாரிகள் சேர்ந்து, மணலை கொட்டி சாலையை சமன்படுத்தினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால், சர்வீஸ் சாலையில் மீண்டும் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், அவ்வழியாக செல்வோர், பள்ளம் தெரியாமல் விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்காணித்து, புதிய சாலை அமைக்க வேண்டும். அல்லது பள்ளங்களை முழுதாக சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.