sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ கைவிடப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

/

கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ கைவிடப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ கைவிடப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ கைவிடப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்


ADDED : மே 10, 2024 11:55 PM

Google News

ADDED : மே 10, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் விரிவாக்கத்தில், சிறுசேரி - கிளாம்பாக்கம்; பூந்தமல்லி - பரந்துார்; கோயம்பேடு - ஆவடிக்கு சேவை நீட்டிப்பது குறித்து திட்டமிடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு தனியார் நிறுவனங்கள் வாயிலாக அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் வழங்கியது.

அரசின் ஒப்புதலை தொடர்ந்து, கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துார் இடையே, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

அதேநேரம், போதிய பயணியர் இல்லாததால், கிளாம்பாக்கம் - சிறுசேரி மெட்ரோ விரிவாக்க திட்டம் கைவிடப்படுவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ நிர்வாகம் தயாரித்த திட்ட அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளை கணக்கீடு செய்ததில், 'பீக் ஹவர்'களில் ஒரு மணி நேரத்தில் 14,000த்துக்கும் மேல் பயணிக்க வேண்டும். ஆனால், கிளாம்பாக்கம் - சிறுசேரி திட்டத்தில், 'பீக் ஹவர்' பயணியர் எண்ணிக்கை 5,000த்தை தாண்டவில்லை என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் தான், திட்டம் இப்போதைக்கு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்துார் இடையே, 'பீக் ஹவர்' கணக்கீடு செய்யப்பட்டதில், பயணியர் எண்ணிக்கை 20,000த்தை கடந்தது.

மறுபரிசீலனை?


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தற்போது தான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், அடுத்த சில ஆண்டுகளில் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் நிறுவனங்களும் குடியிருப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளன. அதற்கேற்ப மக்கள் நெருக்கமும் அதிகரிக்கும் எனவே, இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என, சிறுசேரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளாம்பாக்கம் - சிறுசேரி முக்கியமான இணைப்பு என்பதால், கோரிக்கையை ஏற்று, மாற்று வழித்தடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுசேரியில் 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. 20,000த்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். அவர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு, சிறுசேரி - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் உதவியாக இருக்கும். அதே போல, கிராமப் பகுதிகளில் இருந்து சிறுசேரிக்கு புதிதாக வேலை தேடி வருவோர், ஏற்கனவே வேலையில் இருப்போருக்கு உதவியாக இருக்கும். இந்த திட்டம் கைவிடப்பட்டது ஏமாற்றமாக உள்ளது.

- எம்.ஆனந்தன்,

மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி,

தனியார் நிறுவனம், திருப்போரூர்.






      Dinamalar
      Follow us