/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்சோவில் ஜாமின் பெற்றவர் மீண்டும் கைது
/
போக்சோவில் ஜாமின் பெற்றவர் மீண்டும் கைது
ADDED : மே 06, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை:ஆர்.ஏ., புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஸ், 24. இவர், இ.சி.ஆர்., பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் 'சில்மிஷம்' செய்தார்.
புகாரில், நீலாங்கரை மகளிர் போலீசார், 2022ல், போக்சோ சட்டத்தில் ஆகாஸை கைது செய்தனர். நீதிமன்ற ஜாமினில் வெளிவந்த இவர், சிறுமிக்கு மொபைல் போனில் மீண்டும் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமி தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம், ஜாமினை ரத்து செய்ததை அடுத்து, நேற்று முன்தினம், ஆகாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.