sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர்கள் ஆர்ப்பாட்டம் போலீசார் சமரசம்

/

மாணவர்கள் ஆர்ப்பாட்டம் போலீசார் சமரசம்

மாணவர்கள் ஆர்ப்பாட்டம் போலீசார் சமரசம்

மாணவர்கள் ஆர்ப்பாட்டம் போலீசார் சமரசம்


ADDED : ஜூன் 01, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு, கட்டணம் செலுத்திய பிறகும், நிலுவை இருப்பதாக கூறும், கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை திருவேற்காடு, வேலப்பன்சாவடியில், சவீதா பல்கலை கழகத்தின் கல்லுாரி உள்ளது. அதில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எம்.பி.ஏ., படிக்கின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் நேற்று காலை, கல்லுாரி வாசலில் கூடி, நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவேற்காடு போலீசார், அங்கு சென்று மாணவர்களிடம் விசாரித்தனர்.

மாணவர்கள் கூறியதாவது:

முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கல்வி கட்டணமாக, 3 லட்சம் ரூபாயை, கல்லுாரி நிர்வாகத்திடம் செலுத்தினோம். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்டதற்கான ரசீது ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், ஒவ்வொரு மாணவரும், 50,000 முதல், 2 லட்சம் ரூபாய் வரை, கட்டண நிலுவை வைத்திருப்பதாகவும், அதை உடனே செலுத்த வேண்டும் எனவும் கல்லுாரி நிர்வாகம் கூறியது. இப்பிரச்னையால், இரண்டு வாரமாக வகுப்புகள் நடத்தப்படாமல் உள்ளன.

இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

அதன் பிறகு மாணவர்களுடனும் கல்லுாரி நிர்வாக ஊழியர்களுடனும் போலீசார் பேச்சு நடத்தினர். அதன்பின் ஏற்பட்ட சமரசத்தால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us