sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காவல் துறையின் இசை நிகழ்ச்சி மெரினாவில் மக்கள் கண்டுகளிப்பு

/

காவல் துறையின் இசை நிகழ்ச்சி மெரினாவில் மக்கள் கண்டுகளிப்பு

காவல் துறையின் இசை நிகழ்ச்சி மெரினாவில் மக்கள் கண்டுகளிப்பு

காவல் துறையின் இசை நிகழ்ச்சி மெரினாவில் மக்கள் கண்டுகளிப்பு


ADDED : மே 05, 2024 12:19 AM

Google News

ADDED : மே 05, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெரினா, மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே, தமிழக காவல் துறை சார்பில், சென்னை பெருநகர காவல் துறை காவலர்கள் இசைக்குழு இசை நிகழ்ச்சி, சனிக்கிழமைதோறும் நடந்து வருகிறது.

அந்த வகையில், சென்னை பெருநகர காவல் துறை காவலர்கள் இசை குழு சார்பில், இசை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. பொழுதுபோக்க கடற்கரைக்கு வந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இசை நிகழ்ச்சியை மிகவும் ஆர்வத்துடனும் கண்டு களித்தனர்.

திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் கூறுகையில், ''மெரினா கடற்கரையில் விடுமுறை நாட்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் நல்லுறவு பேணுவதற்காக, இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். பணி அழுத்தத்தில் தவிக்கும் போலீசாருக்கு புத்துணர்ச்சி கிடைக்கவும், இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us