ADDED : பிப் 22, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை, அமைந்தகரை, மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீலேஷ், 50. இவர், சூளைமேட்டில், போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். தன் வீட்டில் செல்ல பிராணிகளான நாய், பூனையை தலா ஒன்று என, ஒன்றரை ஆண்டுகளாக வளர்த்து வந்தார்.
திடீரென கடந்த, 17ம் தேதி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இருந்த பூனை காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்காததால், ப்ளூ கிராஸ் அமைப்பில், ஸ்ரீலேஷ் புகார் அளித்தார்.
காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருமாறு நேற்று முன்தினம் இரவு, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். போலீசார், பூனை வழிமாறி போனதா அல்லது மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா என்று தேடி வருகின்றனர்.