sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கணவரை கொன்று மனைவி நாடகம் சிக்க வைத்த பிரேத பரிசோதனை

/

கணவரை கொன்று மனைவி நாடகம் சிக்க வைத்த பிரேத பரிசோதனை

கணவரை கொன்று மனைவி நாடகம் சிக்க வைத்த பிரேத பரிசோதனை

கணவரை கொன்று மனைவி நாடகம் சிக்க வைத்த பிரேத பரிசோதனை


ADDED : ஜூலை 26, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லிவாக்கம், வில்லிவாக்கம், சிட்கோ நகர், 57வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷபாஷா, 49. இவரது மனைவி ஷாஜிதா பானு, 38.

கடந்த பிப்., 28ம் தேதி, கவுஷபாஷா வீட்டில் மயக்கமடைந்ததாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அதேநாளில் இறந்தார்.

சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரித்த போது உடல்நலக்குறைவால் இறந்ததாக போலீசில் ஷாஜிதா பானு கூறினார்.

இதையடுத்து, போலீசார் இயற்கை மரணம் பிரிவில் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனை செய்து மனைவியிடம் ஒப்படைத்தனர்.

இயற்கை மரணம் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை, தாமதமாக கடந்த வாரம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், கவுஷபாஷா கழுத்து இறுக்கப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணையில், ஷாஜிதா பானு கடந்த ஜன., மாதம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் வில்லிவாக்கத்தில் கைது செய்யப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து மீண்டும் ஷாஜிதா பானுவை போலீசார் விசாரித்தனர்.

பாலியல் தொழிலில் ஷாஜிதா பானு ஈடுபட்டு வந்தது தொடர்பாக அவரை கணவர் கவுஷபாஷா தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ஷாஜிதா பானு தன் துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.






      Dinamalar
      Follow us