/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம்
/
தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம்
ADDED : ஜூன் 04, 2024 12:48 AM
எம்.ஜி.ஆர்., நகர்,
எம்.ஜி.ஆர்., நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் நான்கு மாணவர்கள், கடந்த மே 31ம் தேதி சான்றிதழ் வாங்க பள்ளிக்கு சென்றனர்.
இந்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ், புத்தகங்கள் ஏற்றி இறக்க, லோடுமேனாக பயன்படுத்தினார்.பெற்றோர் தட்டிக் கேட்ட போது, மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் மிரட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று, பள்ளி முன் போராட்டம் நடந்தது.
தகவல் அறிந்து வந்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு வந்த கோடம்பாக்கம் மண்டலம், கல்வி துறை உதவி கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்து விட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.