/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்
/
ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 26, 2024 12:12 AM
சென்னை, மத்திய அரசு வழங்கும் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதிற்கு, 18 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக, ஆண்டுதோறும், 'பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது, தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை பாராட்டி வழங்கப்படுகிறது.
மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது.
இந்த விருதை பெற, இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும், 5 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க, awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விருதுக்கான விண்ணப்பத்தை, ஜூலை 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.