/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
/
கூவத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூலை 19, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, சிவானந்தா சாலையில் உள்ள கூவம் ஆற்றில், நேற்று மாலை 4:00 மணியளவில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, அவ்வழியே சென்ற பாதசாரிகள், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினருடன் வந்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.