/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநீர்மலை ஏரியில் சீரமைப்பு பணி துவக்கம்
/
திருநீர்மலை ஏரியில் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 10, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநீர்மலை, தாம்பரம் அடுத்த திருநீர்மலையில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 194.01 ஏக்கர் பரப்பு ஏரி உள்ளது. சுற்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் அதிகரித்ததால், 146.94 ஏக்கராக குறைந்து விட்டது.
பராமரிப்பற்ற இந்த ஏரியை சுத்தப்படுத்த, இ.எப்.ஐ., என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அந்நிறுவனம், ஏரி ஆகாயத்தாமரையை அகற்றி சுத்தப்படுத்துதல், கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுதல் கொட்டி பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.
இப்பணியை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.