sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூவை காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை

/

பூவை காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை

பூவை காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை

பூவை காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை


ADDED : ஜூன் 24, 2024 02:27 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:சென்னை, பூந்தமல்லி நகராட்சி மேல்மா நகரில், கூட்டுறவு துறைக்குச் சொந்தமான கட்டடத்தில், கடந்த 1992 முதல் பூந்தமல்லி காவல் நிலையம் இயங்குகிறது.

தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்துஉள்ளது. கூரைகள் பலவீனமாக உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் கசிகிறது.

மேலும், போலீசார் ஓய்வு அறை, ஆவணங்கள் காப்பகம், கைதிகள் விசாரணை அறை, வழக்கு விசாரணைக்கு வருவோர் அமரும் இடம், வழக்கில் சிக்கிய வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.

இதனால், ஏற்கனவே பணிச்சுமையில் உள்ள போலீசார், இடநெருக்கடியால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேலும், பெரு மழைக்காலத்தில் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் தேங்குவதால், போலீசார் மற்றும் வழக்கு விசாரணைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர்.

எனவே, பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு சொந்தமாக இடம் தேர்வு செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய காவல் நிலைய கட்டடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us