/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை வெட்டிய ரவுடிக்கு 'காப்பு'
/
வாலிபரை வெட்டிய ரவுடிக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 22, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழுகிணறு, சென்னை, ஏழுகிணறு கோழி மார்க்கெட், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 23.
இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஏழுகிணறு தெருவில் நடந்து சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார்.
திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆகாஷை வெட்டி விட்டு தப்பினார். புகாரை விசாரித்த ஏழுகிணறு போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட ஏழுகிணறு தெருவைச் சேர்ந்த ராஜேஷ், 23, என்பவரை நேற்று கைது செய்து, கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.