sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு

/

கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு

கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு

கூவத்தில் தவறி விழுந்த வடமாநில வாலிபர் மீட்பு


ADDED : ஜூன் 20, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழும்பூர், கூவம் ஆற்றில் தவறி விழுந்த வடமாநில வாலிபர், மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டார்.

எழும்பூர், எத்திராஜ் கல்லுாரி அருகிலுள்ள கூவம் ஆற்றில், நேற்று காலை 7:00 மணியளவில், வடமாநில வாலிபர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த அங்கிருந்தோர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகு வாயிலாக சென்று வாலிபரை மீட்க முயற்சித்தனர்; ஆனால் முடியவில்லை. கூவம் ஆற்றில் ஆகாய தாமரை மற்றும் குப்பை அதிக அளவில் இருந்ததால், சேற்றில் சிக்கிய வாலிபரை மீட்க முடியாமல் திணறினர்.

பின், மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின், கயிறு கட்டி அவரை மீட்டனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவரிடம் விசாரித்தும், அவர் குறித்த விபரம் தெரியவில்லை.

உடல் முழுதும் காயங்கள் இருந்ததால், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us