/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரி பாக்கி குடியிருப்பு ஆபீசுக்கு 'சீல்'
/
வரி பாக்கி குடியிருப்பு ஆபீசுக்கு 'சீல்'
ADDED : மார் 08, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாடி,அம்பத்துார் பாடி புதுநகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு நிர்வாகம், 43.73 லட்சம் ரூபாய் சொத்து வர சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ளது.
பல முறை நோட்டீஸ் அளித்தும், வரி கட்டாததால் நேற்று அம்பத்துார் மண்டல அதிகாரிகள், குடியிருப்பு அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர். இனியும் தாமதம் செய்தால், குடியிருப்புக்கு சீல் வைக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.