ADDED : ஆக 08, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம் தர்கா சாலையில், இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டப்பட்டு உள்ளது. பல்லாவரத்தில் இருந்து, 10க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்ல, இச்சுரங்கப்பாதையே முக்கியமான பாதை.
தினம், ஏராளமான வாகனங்கள் சென்று வரும் இச்சுரங்கத்தின் மேற்பகுதியில் கழிவுநீர், குட்டை போல் தேங்கி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் அதிகரித்து நடந்து செல்வோரும், அருகே வசிப்போரும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுப்பரா?