ADDED : மே 22, 2024 12:16 AM

ஆவடி,
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு, பட்டாபிராம், காந்தி நகர், கக்கன்ஜி தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கக்கன்ஜி தெரு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இது குறித்த புகாரை அடுத்து, தார்ச்சாலை அமைக்க கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது.ஆனால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், கடந்த ஓராண்டாக அதிகாரிகள் மெத்தனமாக இருந்தனர். இதனால், அடிக்கடி விபத்து அசம்பாவிதங்கள் நடந்தன.
மேலும், வாகனங்கள் சென்று வருவதால் ஜல்லியில் இருந்து துாசி பறந்து வீடுகளில் படிந்தது. இதனால், ஜன்னல் திறந்து வைக்க முடியாமல் பகுதிவாசிகள் அவதியடைந்தனர்.
இது குறித்து, கடந்த 7ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் இங்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்த 'தினமலர்' நாளிதழ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பகுதிவாசிகள் நன்றி தெரிவித்தனர்.

