sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணை கட்டிப்போட்டு 25 சவரன் நகை கொள்ளை?

/

பெண்ணை கட்டிப்போட்டு 25 சவரன் நகை கொள்ளை?

பெண்ணை கட்டிப்போட்டு 25 சவரன் நகை கொள்ளை?

பெண்ணை கட்டிப்போட்டு 25 சவரன் நகை கொள்ளை?


ADDED : ஆக 31, 2024 12:12 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம், காரம்பாக்கம், தர்மராஜா நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 50. இவருடன், மகள் சந்தானலட்சுமி, 28, மருமகன் சிவமுருகன், 30, ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் மூவரும் உறங்க சென்றனர்.

நேற்று அதிகாலை, மருமகன் சிவமுருகன் அறையிலிருந்து வெளியே வந்த போது, சாந்தி கை, கால்கள் கட்டப்பட்டு, மயக்க நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிவமுருகன், உடனே அவரை மீட்டு பூந்தமல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

இது குறித்த தகவலின்படி, வளசரவாக்கம் போலீசார் வந்து சாந்தியிடம் விசாரித்தனர்.

அப்போது, மர்ம நபர்கள் அதிகாலையில் வீட்டில் புகுந்து, கட்டிப்போட்டு மயக்க 'ஸ்பிரே' அடித்து, கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகை, பீரோவிலிருந்த, 15 சவரன் என, 25 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக கூறியுள்ளார்.

சம்பவ நடந்த வீட்டில் போலீசார் ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் வந்து சென்றது போல எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, யாரும் வந்து போனதாக பதிவாகவில்லை.

ஆனால் வீட்டில், நகை அடகு வைத்த ரசீதுகள் மட்டும், ஆங்காங்கே உள்ளன.

எனவே, உண்மையில் நகை கொள்ளை போனதா, பொய் புகார் அளித்துள்ளார்களா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us