sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.48 லட்சம் மோசடி ராயப்பேட்டை நபர் கைது

/

ரூ.48 லட்சம் மோசடி ராயப்பேட்டை நபர் கைது

ரூ.48 லட்சம் மோசடி ராயப்பேட்டை நபர் கைது

ரூ.48 லட்சம் மோசடி ராயப்பேட்டை நபர் கைது


ADDED : பிப் 26, 2025 12:14 AM

Google News

ADDED : பிப் 26, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்டிபஜார், தி.நகர், தங்கவேல் தெருவைச் சேர்ந்த வித்யா, 56. இவருக்கு அறிமுகமான, தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஆலோசகர் அன்பரசு, அவரது மனைவி ஜோதிலட்சுமி, மகன் கிரீஷ் ஆகியோர், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆசைகாட்டி உள்ளனர்.

அவர்களின் வார்த்தைகளை நம்பிய வித்யா, கடந்த 2022ம் ஆண்டு முதல் பல தவணைகளாக, 48.50 லட்சம் ரூபாய் அன்பரசுவிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், அன்பரசு குடும்பத்தினர் கூறியபடி லாபத்தை தராமலும், கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி தலைமறைவாகினர். இது குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரித்தனர்.

இதில், ராயப்பேட்டை, உசேன் தெருவைச் சேர்ந்த அன்பரசு, 57, என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே, சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒரு மோசடி வழக்கு உள்ளது தெரியவந்தது. மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us